Ezhil's Mathsmagic: இந்தியா ஏன் வல்லரசாகவில்லை!!!

Saturday 16 January 2021

இந்தியா ஏன் வல்லரசாகவில்லை!!!

 1937-லேயே நேதாஜி அவர்களால் கிடைக்க வேண்டிய விடுதலையை -பத்து வருடம் 1947-ல் காந்தியின் மூலமாகக் கிடைத்தது போல கொடுத்தார்கள் - பாராளுமன்றத்தில் பசும்பொன்னார் உரை.

"குருதியைத் தாருங்கள், விடுதலை பெற்றுத் தருகிறேன்" என்று வீர முழக்கமிட்டு இளைஞர்களிடேயே விடுதலை வெறியை ஊட்டியவர் 'நேதாஜி' என்று தாகூரால் பட்டம் சூட்டப்பெற்ற சுபாஷ் சந்திரபோஸ் -'ஜெய்ஹிந்த்' என்ற வீர முழக்கத்தை இந்தியர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் (இதை இவர் செண்பகராமன் பிள்ளை மூலம் பெற்றார்).உண்மையில் நாம் 1947-ல் பெற்றது சுதந்திரமே அல்ல.அது தனக்கு விசுவாசமாக இருந்த காந்தி, நேரு போன்றோருக்கு பிரிட்டிஷாரா அதிகாரங்களை மட்டும் மாற்றிக் கொடுக்கப்பட்ட ஒரு நிகழ்வு.

ஜெனரல் டையரைச் சுட்டுக்கொன்ற உத்தம்சிங்கிற்கு கண்டணம் தெரிவித்தவர் காந்தி. இந்தச் சம்பவம் தான் காந்தி - போஸ் மோதலுக்கு முக்கியக் காரணம்.

1939-ல் காங்கிரஸ் தலைவராக போஸ் காந்தியின் எதிர்ப்பையும் மீறி தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது, போஸின் செல்வாக்கு அதிகரித்து வருவதைப் புரிந்து கொண்ட காந்தி. அவருக்கு எதிராக உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் -( இதை விட அயோக்கியத்தனம் இருக்க முடியுமா?) இதைப் பார்த்த போஸ் மனமுடைந்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதே வருடம் ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியைத் தொடங்கினார்(அதன் தமிழகத் தலைவராக இருந்தவர் தேவர்).

அதன் பிறகு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட போஸ் அங்கிருந்து தப்பி ஆப்கன் வழியாக ஜெர்மன் சென்றடைந்தார். அங்கு ஹிட்லரைச் சந்தித்த போது எப்படி வரவேற்றார் தெரியுமா?” வருங்கால இந்தியாவின் சர்வாதிகாரியே வருக என்று வரவேற்றார். அதே போல் தான் அடுத்ததாக ஜப்பான் பிரதமர் டோஜோ அவர்களும் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவின் அனைத்துமாக போஸ் இருப்பார் என்று தெரிவித்தார். ஆனால், இந்த இரண்டு இடங்களிலுமே போஸ் அவர்கள் கூறிய மறுமொழி "என் நாட்டின் சுதந்திரத்திற்கு உதவி மட்டுமே வேண்டும், நாட்டை ஆள்பவனை மக்கள் தான் முடிவு செய்வார்கள்" என்பதே.. இப்பொழுது புரிந்திருக்கும் காந்தி, நேரு வகையறா ஏன் இவர் மேல் காண்டாக இருந்தார்கள் என்று.

உண்மையில் அறுபது ஆண்டுகளாக பள்ளிகளில் நாம் படித்து வருவது வரலாறு அல்ல.அது  வரலாற்றுத் திரிபு.

உண்மையில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இருந்திருக்க வேண்டியவர் பட்டேல் அவர்கள்தான். தேர்ந்தெடுக்கப்பட்டவரும் அவர் தான் ஆனால் நேரு காந்தியின் ஆதரவுடன் பிரதமரானார்.

1945-ல் ஆகஸ்ட் 18 தேதி நேதாஜி தைவான் விமான விபத்தில் காலமானதாக அறிவித்தார்கள். ஆனால், அப்படி ஒரு விமான விபத்தே நடக்கவில்லை என்று தைவான் சொன்னது. ஒரு வேளை போஸ் மட்டும் முதல் பிரதமராக வாய்த்திருந்தால்…..

பாரதம் எப்பொழுதோ வல்லரசாகி இருக்கும்.         - படித்ததில் பிடித்தது.

No comments:

Post a Comment