- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25872, பலி 208 ஆக உயர்வு.
- இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,98,706 ல் இருந்து 2, 07,615 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 5,815 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,00,303, ஆக அதிகரித்துள்ளது.
- 'பொதுத்தேர்வில் பங்கேற்கும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, 46 லட்சம் மறுபயன்பாட்டு முக கவசங்கள் வழங்கப்படும்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
- ஜி7 மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை அழைத்திருப்பது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ், ஜூன் 1ம் தேதி வரை, பொதுத்துறை வங்கிகள் ரூ.10,361.75 கோடி கடனுதவி அளித்துள்ளன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
- கொரோனா பாதிப்புக்கு, பாரம்பரிய சித்த மருத்துவத்தில் நல்ல பலன் கிடைத்து வருவதால், தனித்த சித்தா சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு மையம், சென்னையில் நேற்று துவக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியும், சித்தா டாக்டர்களும் இணைந்து, இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
- அமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட, ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவருடைய சொந்த ஊரான, ஹூஸ்டனில், பிரமாண்ட பேரணி நடந்தது. இதில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- “இனப்பாகுபாடு என்பது வெறுப்புணர்ச்சி; அதை, நாம் அனைவரும் நிராகரிக்க வேண்டும்,” என, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.
- அமெரிக்காவில், கறுப்பினத்தைச் சேர்ந்தவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- ''சில நேரங்களில் அமைதியாக இருப்பது கூட ஒருவகையில் துரோகச் செயல் தான்,'' என ஒசாகா தெரிவித்தார்.
- ''சில நேரங்களில் அமைதியாக இருப்பது கூட ஒருவகையில் துரோகச் செயல் தான்,'' என ஒசாகா தெரிவித்தார்.
- அமெரிக்காவில் போலிஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட கறுப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டார். பல்வேறு விளையாட்டு நட்சத்திரங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விண்டீஸ் கிரிக்கெட் வீரர் கெய்ல்,'கால்பந்தில் மட்டுமல்ல, கிரிக்கெட்டிலும் இனவெறி உள்ளது,' என்றார்.
Learn Mathematics easy and enjoyable with different forms. General News,Stories, Employment News.
Pages
Showing posts with label June 2020. Show all posts
Showing posts with label June 2020. Show all posts
Thursday, 4 June 2020
இன்றைய செய்திகள் - 4th June 2020
Monday, 1 June 2020
கல்விச் செய்திகள்
பள்ளிக் கல்வித்துறை வல்லுநர் குழுவில் கல்வியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகள் இல்லை - கவனிக்குமா கல்வித்துறை!
பொதுத்தேர்வில் பங்கேற்கும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, 46 லட்சம் மறுபயன்பாட்டு முக கவசங்கள் வழங்கப்படும்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிகள் மாணவர்களுக்கான விடுதிகளை ஜூன் 11 முதல் திறக்குமாறு உத்தரவு.
- பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து ஜூலையில் முடிவு: மத்திய அரசு.
- பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் - தேர்வுத்துறை உத்தரவு ! 10 ம் வகுப்பு தேர்வு ஹால் டிக்கெட்டை தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவர்களிடம் வழங்க வேண்டும் ; கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்க உத்தரவு !
- 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும்: செங்கோட்டையன்.
- பள்ளி பாடங்களை குறைக்கலாமா? ஆலோசனையில் ஆய்வுக்குழு.
இன்றைய செய்திகள் - 1st June 2020
- தமிழகத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புதிய உச்சமாக, நேற்று ஒரே நாளில், 1,149 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
- தமிழகத்தில் 22 ஆயிரத்து, 333 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
- சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது
- ரேஷன் கடைகளில், இம்மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வினியோகம், இன்று முதல் துவங்குகிறது.
- தமிழகத்தில் 33 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் நீங்குவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
- வழிபாட்டு தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தக்கூடாது
- ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு சுற்றுலா தலங்களுக்கு வெளியூர் சுற்றுலா பயணியர் செல்லக்கூடாது
- தங்கும் வசதிடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் பிற விருந்தோம்பல் சேவைகள் கிடையாது; இதில் தனிமைப்படுத்தும் பணிகளுக்கு மட்டும் விலக்கு
- வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி இல்லை. இந்நிறுவனங்கள் இணையவழி கல்வி கற்றலை தொடர்வதுடன் அதை ஊக்கப்படுத்தலாம்
- மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்
- மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை கூடங்கள், பார்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்களுக்கு தடை தொடரும்
- அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுது போக்கு, கலாசார நிகழ்வுகள், சமய, கல்வி விழாக்கள் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் கிடையாது
- இந்த கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றவாறு படிப்படியாக தளர்த்தப்படும்
- இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது
- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் நீங்கலாக தமிழகம் முழுவதும் இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. அனைத்து பெரிய கடைகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Comments (Atom)