பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்றைய தொலைக்காட்சி பேட்டியில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
- நாளை செப்.1 முதல் பள்ளிகள் காலை 9.30 மணி முதல் செயல்படும். மாலை 3.30 மணிக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும். மாஸ்க் இல்லை என்றால் பள்ளியில் வழங்க வேண்டும்.
- ஒவ்வொரு வகுப்பிலும் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும்.
- ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டும் செயல்படும்.
- விளையாட்டு நேரம் கிடையாது.
- மாணவர்கள் மனதளவில் தயாரான பிறகு வகுப்புகள் தொடங்கப்படும், அது வரை புத்தாக்க பயிற்சி வழங்கப்படும்.
- பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை..
No comments:
Post a Comment