Ezhil's Mathsmagic: இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்தநாள்

Wednesday 25 August 2021

இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்தநாள்

 இன்று திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்தநாள்.



வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூரில் 1906-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 25-ம் நாள் வாரியார் சுவாமிகள் பிறந்தார். 

மூன்று வயதில் இருந்தே தம் தந்தையிடம் கல்வி பயின்றார். கல்வியுடன் புராண இதிகாசங்களையும் கற்றுத் தேர்ந்தார். 

18 வயதிலேயே இறையருள் பெற்று தமது சொற்பொழிவுப் பணியைத் தொடங்கினார். சுமார் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக்கும் வாரியார் சுவாமிகள், 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், 150-க்கும்மேற்பட்ட நூல்களையும் எழுதியிருக்கிறார். திரைத்துறையில் வசனகர்த்தாவாக அறிமுகமாகி, முருகப் பெருமானின் புகழைக் கூறும் சில படங்களிலும் நடித்தார். வீணை வாசிப்பதில் நிபுணத்துவம் பெற்ற வாரியார் ஸ்வாமிகள் அனைவராலும் விரும்பக்கூடிய சொற்பொழிவாளராகவே திகழ்ந்தார்.  ஆன்மிகப்பெரியோர்கள் அனைவரும் மதிக்கும் உயர்ந்த குணம் கொண்டவராகவே வாழ்ந்தார். பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர், வசனகர்த்தா, தீட்சை அளித்த ஞானகுரு, நடிகர்,
ஆன்மிக சேவகர் எனப் பன்முகம் கொண்டவராக இவர் விளங்கினார். பூமியில் பிறந்து வானுறையும் தெய்வங்களைத் தொழுது, தொண்டாற்றி வந்த இந்த மகான், வானிலேயே மறைந்து போனார். ஆம், 1993-ம் ஆண்டு லண்டன் சென்று இந்தியா திரும்பிய வாரியார் சுவாமிகள், நவம்பர் 7-ம் தேதி விமானப் பயணத்திலேயே மறைந்தார்.


No comments:

Post a Comment