ஆசிரியர்களின் வருகைப்பதிவை TN -EMIS APP இல் பதிவு செய்தல்
02.08.2021 முதல் அனைத்துவகை ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர அரசு பணித்துள்ளது. மேலும் ஆசிரியர்களின் வருகையை அனைத்து தலைமை ஆசிரியர் அல்லது உதவி தலைமை ஆசிரியர் பெருமக்கள் TN -EMIS APP -ல் காலை 10.00 மணிக்குள் பதிவு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சார்ந்து ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்து, தவறாமல் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதை கண்காணிக்க வேண்டும். இப்பதிவை மேற்கொள்ள வட்டார அளவில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள், தங்களின் ஒவ்வொரு வேலை நாளிலிலும் மேற்கொள்ள வேண்டும்.உரிய காரணங்கள் இன்றி தொடர்ச்சியாக பதிவை மேற்கொள்ளாத பள்ளிகளின் பட்டியலை மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்று பதிவை மேற்கொள்ள ஆவன செய்தல் வேண்டும்.
*மாவட்ட திட்ட அலுவலகம்
No comments:
Post a Comment