மாற்றுத்திறனாளி குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதின் முக்கியத்துவத்தையும், சமுதாயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வையும், பொதுமக்களிடையே இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாநிலம் முழுவதுமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் 3ஆம் தேதி "உலக மாற்றுத்திறனாளிகள் தினம்" கொண்டாடப்படும் நிலையில் , நவம்பர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நவம்பர் 14ஆம் தேதி, காலை வணக்கக்கூட்டத்தில் உறுதிமொழி எடுக்க வேண்டும். பின் அன்று "குப்பச்சிகளு" என்ற திரைப்படத்தை 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திரையிட வேண்டும்.
காலை வணக்கக்கூட்டத்தில் எடுக்க வேண்டிய உறுதிமொழி பதிவிறக்க
மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
No comments:
Post a Comment